செவ்வாய், 14 அக்டோபர், 2025

கண்ணீர் அஞ்சலி



 



சுமார் 30, 35 வயது கொண்ட  இளைஞரின் எண்ணம், லட்சியம் என்னவாக இருக்கும்?

 கை நிறைய சம்பாத்தியம், கலர்ஃபுல்லான & ஸ்டைலிஷ் ஆன வாழ்க்கை இவை தானே இன்றைய இளைஞர்கள் லட்சியம்.
 ஆனால்  இன்றைக்கு  60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளைஞர் கனவு கண்டார், தனது தனது ஊர் சிறுவர்களின் எதிர்காலத்தை சிறப்படையச் செய்ய எண்ணினார், தன்னைப் போலவே ஒத்த எண்ணமும், பெயரும் கொண்ட இளைஞருடன் இணைந்து, இருவரும் தங்களது விளை நிலத்தை (இன்றைய நிலவரத்தில் பல கோடி பெறும்) கல்விக்காக கொடையாக அளித்தனர். 

விளைவு, பொருளாதாரத்திலும், விவசாயத்திலும் மிகவும் பின்தங்கிய பகுதியான முத்துநாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உருவானது. 

மருத்துவர்கள், ஆசிரியர்கள்,  அரசு உயர் அதிகாரிகள்,  விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பல்துறை வித்தகர்கள் இப்பள்ளியிலிருந்து உருவானார்கள். ஆயிரக்கணக்கான ஏழை- எளிய, நடுத்தர மாணவர்களுக்கு கல்வித்தாகம் தணிக்கும் ஞான ஊற்றாக  கல்விக் கருவறையாக இன்றும் திகழ்கிறது முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி.

பள்ளி உருவான நாள் முதல் பெற்றோர் ஆசிரியர்  கழகத் தலைவராக இருந்து உயர்நிலைப் பள்ளியை  ஒவ்வொரு கட்டத்திலும் மேம்படுத்தி, மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தி கல்விச் சேவை புரிந்ததுடன், ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடை நடத்தி கடைக்காரர் என மக்களால் அழைக்கப்பட்டு, நூற்றாண்டு கண்ட ஐயா காளியப்பக் கவுண்டர் அவர்கள் நேற்று (14.10.2025) காலமானார்.

அவரைப் போல் நம்மால் இயன்ற அளவு அறப்பணிகளில் ஈடுபடுவதே அன்னாருக்குச் செலுத்தப்படும் உண்மையான நினைவஞ்சலியாகும்.

 அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது இடையகோட்டை வலைப்பூ.

சை. ஷாகுல் ஹமீது