15 ஆண்டுகள்
117 பதிவுகள்
45753 பார்வைகள் ( 24.05.2025 காலை 9.00 மணிக்கு)
2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது நமது இடையகோட்டை வலைப்பூ🌺
பதினாறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது வலைப்பக்கத்தில்
இடையகோட்டை குறித்த வரலாற்று குறிப்புகள், இடையகோட்டையின் சான்றோர் பெருமக்கள் குறித்த தகவல்கள் ஆகியவற்றை இணைய வழி மூலம் உலகெங்கும் எடுத்துச் செல்ல மேற்கொண்ட முயற்சி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை பிளாக்கர் புள்ளிவிவரம் மூலம் அறிய முடிகிறது ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா என நான்கு கண்டங்களில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறது பணிச்சுமை உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால் பதிவுகளுக்கான ஆதாரங்கள் திரட்டுவதிலும், பதிவுகள் எழுதுவதிலும் சற்று தோய்வு ஏற்பட்டுள்ளது வாஸ்தவம் தான்.
இனி வரும் காலங்களில் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இடைவேளையில் பதிவுகள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் சேகரிக்கும் முயற்சி நடைபெறுகிறது. இந்த 15 ஆண்டுகளில் தொடர்ந்து நமது வலைப்பூவை வாசித்து வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். 🎉🎉🎉🎉
ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டுள்ளது போல் நீங்களும் இடையகோட்டை சார்ந்த தகவல்கள், ஆவணங்கள், நிழற்படங்கள் இருப்பின் அவற்றை மின்னஞ்சல் மூலமாக அல்லது whatsapp மூலமாக அனுப்பும் பட்சத்தில் அனுப்புபவரது படம் மற்றும் பெயருடன் இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
🌹🌹🌹🌹வாருங்கள் நமது ஊரை உலகறிய செய்வோம்.
👍👍👍






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக