
சனி, 28 செப்டம்பர், 2024
திங்கள், 16 செப்டம்பர், 2024
IDAYAKOTTAI கடிதம்
ஒரு கடிதம்.
இடையகோட்டை,
08.09.2024.
அன்புள்ள கடிதம் அவர்களுக்கு,
உங்களை என்றும் மறவாத லட்சக்கணக்கான கடித ஆர்வலர்களில் ஒருவன் ஷாகுல் ஹமீது எழுதுவது. எங்களின் நலன்களை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ள தூது சென்ற உங்களின் நலத்தை அறிய ஆவலாக உள்ளேன்.
எத்தனை நூற்றாண்டுகள் எங்களுக்காக நீங்கள் அலைந்து இருப்பீர்கள் உங்கள் பயணம் எப்படி, எப்போது தொடங்கியது?
மனித உள்ளங்களுக்கு இணைப்புப் பாலமாக எவ்வாறு உருவெடுத்தீர்கள் என பள்ளி பாடங்களில் படித்தது நினைவுக்கு வருகிறது. பழங்காலத்தில் பனை, ஓலை, பட்டுத்துணி, கல்வெட்டு, செப்புப் பட்டயம் என விதவிதமான தோற்றங்களில் நீங்கள் சாதித்தவற்றை எழுத்தில் வடிக்க இந்த ஒரு பதிவு போதாது.
எதிரிநாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் உங்களை சுமந்து வரும் தூதுவனை பாதுகாப்பதும் அவனை பாதுகாப்புடன் திருப்பி அனுப்ப வேண்டும் என்பது அகில உலக அளவில் அக்கால நடைமுறையாகவே இருந்திருக்கிறது என்பது ஒன்றே போதும் உங்களின் முக்கியத்துவம் அறிய.
என்னுடைய சிறு வயது நினைவுகளை திரும்பிப் பார்க்கிறேன் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மூத்தோர்களைப் பொறுத்த அளவில் கடிதம் எழுத, படிக்க தெரிந்திருந்தால் படிப்பாளி, அதிலும் உங்களின் உடன்பிறப்பான தந்தி வாசிக்கத் தெரிந்தவர் அன்றைய நாட்களில் விஐபி யாக கருதப்பட்டார்.
மக்களின் பேரன்புக்குரிய மகத்தான தலைவர்கள் தங்களின் மனசாட்சியாக உங்களைத்தானே வைத்திருந்தனர், (நபிகள் நாயகம் அவர்கள், அபிசீனியா என்று அழைக்கப்பட்ட எத்தியோப்பியா மன்னருக்கு அனுப்பிய கடிதம் 1400 ஆண்டுகளுக்கு மேல் இன்றும் எகிப்து அருங்காட்சியகத்தில் இன்றும் பாதுகாப்பாக உள்ளது)
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட பெரும் பெரும் தலைவர்கள் உங்கள் உதவி கொண்டே வரலாற்றில் சாதித்தனர்.
இந்திய விடுதலை வரலாற்றில் மைசூர் புலி திப்பு சுல்தான் அவர்கள், பிரெஞ்சு மன்னர் நெப்போலியனுக்கு எழுதிய கடிதம், விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கர் அவர்கள் மராத்திய தூந்தாஜி வாக், பல்லடம் ஹாஜி கான் ஆகியோருக்கு உங்கள் வாயிலாக செய்தி அனுப்ப, நீங்களோ வழிமாறி ஆங்கிலேயரின் கைகளில் சிக்கியதின் விளைவு நம் நாட்டின் விடுதலை போராட்டம் கூடுதலாக சுமார் 150 ஆண்டு காலம் நீடிக்க காரணமாகிவிட்டது
அவர்கள் மட்டுமல்ல ஹிட்லர், முசோலினி ஆகியோரும் கூட தங்களது விஷ வித்துக்களை மக்கள் மனதில் பதிக்க நீங்கள் தானே காரணமாக இருந்தீர்கள்.
அது மட்டுமா நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் ஏதும் இல்லாத அந்த காலத்தில் இரு உள்ளங்கள் இணைவதற்கு இணைப்பு பாலமாகவும் நீங்கள் தானே 'காதல் கடிதம்' என்ற பெயரில் தூது சென்றீர்கள், அந்த காதல் கடிதத்துடன் இணைப்பாக எத்தனை அழகிய அன்பளிப்புகளை கொண்டு சென்று சேர்த்தீர்கள்.
(காதல் கடிதங்களை தங்களது மனம் கவர்ந்த மங்கையிடம்/காளையரிடம் சேர்க்கும் முறை குறித்து எழுதினால் பல பாகங்களில் பெரிய காவியமாக அமையும்)
"இந்த கடிதத்தை காகிதத்தில் மட்டும் எழுதவில்லை, கண்ணீரிலும் எழுதுகிறேன், எனக்கு வேறு வழி தெரியவில்லை என்னை மறந்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்" என்ற வசனங்களை ஏந்தி எத்தனை இளவட்டங்களின் கனவுகளை சல்லி சல்லியாக (💔break up) உடைத்தீர்கள்.
லட்சக்கணக்கான தம்பதிகள் தொழில் நிமித்தம் உடலால் பிரிந்தாலும் உள்ளத்தால் இணைய நீங்கள்தானே காரணியாக இருந்தீர்கள்.
ஊருக்குள் ஒரு சில படித்தவர்கள் மட்டும் இருந்த காலத்தில் மாமியார் மருமகள் பஞ்சாயத்து தொலைவில் உள்ள கணவனுக்கு கடிதமாகச் செல்ல, அந்த கணவன் மனைவியின் மீது சில குறைகளை கூறி தாயிடம் எச்சரிக்கை கடிதம் எழுத, அந்த கடிதத்தை வாசிக்கத் தெரியாத தாய், தன் மருமகளிடமே வாசிக்கும்படி சொல்ல, அதன் பிறகு நடந்து கூத்துகள் சொல்லவும் வேண்டுமா?!!
எத்தனை இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, தங்கள் வாழ்வின் விடியலுக்காக உங்களை எதிர்பார்ப்புடன் இளமையை கடந்தே விட்டனர், ஆனால்????
நடந்து கூட செல்ல முடியாத தொலைதூர கிராமங்களுக்கும் சென்று வரக்கூடிய அரசு ஊழியராக தங்களை சுமந்து சென்ற தபால்காரர் தானே திகழ்ந்தார் அன்றைய மக்களின் வாழ்க்கையில் அனைத்து விதமான நிலைகளிலும் உங்களின் செயல்பாடுகள் பின்னிப்பிணைந்தவாறு திகழ்ந்தது என்பதை யாராலும் மறக்க இயலாது.
"கடிதம் என்பது வெறும் காகிதம் அல்ல கணக்கில் அடங்கா உணர்வுகளின் வரி வடிவம்" என்பது உண்மையிலும் உண்மை.
அன்றைய கல்வி முறைகளில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கக்கூடிய வள்ளலாக இருந்தது கடிதம் எழுதுதல் பகுதி தான்.
இன்றைக்கு எவ்வளவு சமூக ஊடகங்கள் அதிவிரைவில் தகவல்களை வழங்கினாலும், மக்களை ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள செய்தாலும் கைக்கடிதம்(பெறுநர் இருக்கும் ஊருக்கு செல்பவர் கொண்டு செல்லும் கடிதம்), காதல் கடிதம், அலுவலக கடிதம் என உங்களின் பல்வேறு அவதானங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் இந்த நவீன ஊடகங்களில் இல்லை என்பது உண்மையிலும் உண்மை.
என்றேனும் ஒருநாள் மீண்டும் வருவீர்கள். உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நான்.
அன்புடன்,
சை ஷாகுல் ஹமீது,
4/65, தெற்குத் தெரு,
இடையகோட்டை-624704,
திண்டுக்கல் மாவட்டம்.
இடையகோட்டை,
08.09.2024.
அன்புள்ள கடிதம் அவர்களுக்கு,
உங்களை என்றும் மறவாத லட்சக்கணக்கான கடித ஆர்வலர்களில் ஒருவன் ஷாகுல் ஹமீது எழுதுவது. எங்களின் நலன்களை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ள தூது சென்ற உங்களின் நலத்தை அறிய ஆவலாக உள்ளேன்.
எத்தனை நூற்றாண்டுகள் எங்களுக்காக நீங்கள் அலைந்து இருப்பீர்கள் உங்கள் பயணம் எப்படி, எப்போது தொடங்கியது?
மனித உள்ளங்களுக்கு இணைப்புப் பாலமாக எவ்வாறு உருவெடுத்தீர்கள் என பள்ளி பாடங்களில் படித்தது நினைவுக்கு வருகிறது. பழங்காலத்தில் பனை, ஓலை, பட்டுத்துணி, கல்வெட்டு, செப்புப் பட்டயம் என விதவிதமான தோற்றங்களில் நீங்கள் சாதித்தவற்றை எழுத்தில் வடிக்க இந்த ஒரு பதிவு போதாது.
எதிரிநாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் உங்களை சுமந்து வரும் தூதுவனை பாதுகாப்பதும் அவனை பாதுகாப்புடன் திருப்பி அனுப்ப வேண்டும் என்பது அகில உலக அளவில் அக்கால நடைமுறையாகவே இருந்திருக்கிறது என்பது ஒன்றே போதும் உங்களின் முக்கியத்துவம் அறிய.
என்னுடைய சிறு வயது நினைவுகளை திரும்பிப் பார்க்கிறேன் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மூத்தோர்களைப் பொறுத்த அளவில் கடிதம் எழுத, படிக்க தெரிந்திருந்தால் படிப்பாளி, அதிலும் உங்களின் உடன்பிறப்பான தந்தி வாசிக்கத் தெரிந்தவர் அன்றைய நாட்களில் விஐபி யாக கருதப்பட்டார்.
மக்களின் பேரன்புக்குரிய மகத்தான தலைவர்கள் தங்களின் மனசாட்சியாக உங்களைத்தானே வைத்திருந்தனர், (நபிகள் நாயகம் அவர்கள், அபிசீனியா என்று அழைக்கப்பட்ட எத்தியோப்பியா மன்னருக்கு அனுப்பிய கடிதம் 1400 ஆண்டுகளுக்கு மேல் இன்றும் எகிப்து அருங்காட்சியகத்தில் இன்றும் பாதுகாப்பாக உள்ளது)
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட பெரும் பெரும் தலைவர்கள் உங்கள் உதவி கொண்டே வரலாற்றில் சாதித்தனர்.
இந்திய விடுதலை வரலாற்றில் மைசூர் புலி திப்பு சுல்தான் அவர்கள், பிரெஞ்சு மன்னர் நெப்போலியனுக்கு எழுதிய கடிதம், விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கர் அவர்கள் மராத்திய தூந்தாஜி வாக், பல்லடம் ஹாஜி கான் ஆகியோருக்கு உங்கள் வாயிலாக செய்தி அனுப்ப, நீங்களோ வழிமாறி ஆங்கிலேயரின் கைகளில் சிக்கியதின் விளைவு நம் நாட்டின் விடுதலை போராட்டம் கூடுதலாக சுமார் 150 ஆண்டு காலம் நீடிக்க காரணமாகிவிட்டது
அவர்கள் மட்டுமல்ல ஹிட்லர், முசோலினி ஆகியோரும் கூட தங்களது விஷ வித்துக்களை மக்கள் மனதில் பதிக்க நீங்கள் தானே காரணமாக இருந்தீர்கள்.
அது மட்டுமா நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் ஏதும் இல்லாத அந்த காலத்தில் இரு உள்ளங்கள் இணைவதற்கு இணைப்பு பாலமாகவும் நீங்கள் தானே 'காதல் கடிதம்' என்ற பெயரில் தூது சென்றீர்கள், அந்த காதல் கடிதத்துடன் இணைப்பாக எத்தனை அழகிய அன்பளிப்புகளை கொண்டு சென்று சேர்த்தீர்கள்.
(காதல் கடிதங்களை தங்களது மனம் கவர்ந்த மங்கையிடம்/காளையரிடம் சேர்க்கும் முறை குறித்து எழுதினால் பல பாகங்களில் பெரிய காவியமாக அமையும்)
"இந்த கடிதத்தை காகிதத்தில் மட்டும் எழுதவில்லை, கண்ணீரிலும் எழுதுகிறேன், எனக்கு வேறு வழி தெரியவில்லை என்னை மறந்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்" என்ற வசனங்களை ஏந்தி எத்தனை இளவட்டங்களின் கனவுகளை சல்லி சல்லியாக (💔break up) உடைத்தீர்கள்.
லட்சக்கணக்கான தம்பதிகள் தொழில் நிமித்தம் உடலால் பிரிந்தாலும் உள்ளத்தால் இணைய நீங்கள்தானே காரணியாக இருந்தீர்கள்.
ஊருக்குள் ஒரு சில படித்தவர்கள் மட்டும் இருந்த காலத்தில் மாமியார் மருமகள் பஞ்சாயத்து தொலைவில் உள்ள கணவனுக்கு கடிதமாகச் செல்ல, அந்த கணவன் மனைவியின் மீது சில குறைகளை கூறி தாயிடம் எச்சரிக்கை கடிதம் எழுத, அந்த கடிதத்தை வாசிக்கத் தெரியாத தாய், தன் மருமகளிடமே வாசிக்கும்படி சொல்ல, அதன் பிறகு நடந்து கூத்துகள் சொல்லவும் வேண்டுமா?!!
எத்தனை இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு, தங்கள் வாழ்வின் விடியலுக்காக உங்களை எதிர்பார்ப்புடன் இளமையை கடந்தே விட்டனர், ஆனால்????
நடந்து கூட செல்ல முடியாத தொலைதூர கிராமங்களுக்கும் சென்று வரக்கூடிய அரசு ஊழியராக தங்களை சுமந்து சென்ற தபால்காரர் தானே திகழ்ந்தார் அன்றைய மக்களின் வாழ்க்கையில் அனைத்து விதமான நிலைகளிலும் உங்களின் செயல்பாடுகள் பின்னிப்பிணைந்தவாறு திகழ்ந்தது என்பதை யாராலும் மறக்க இயலாது.
"கடிதம் என்பது வெறும் காகிதம் அல்ல கணக்கில் அடங்கா உணர்வுகளின் வரி வடிவம்" என்பது உண்மையிலும் உண்மை.
அன்றைய கல்வி முறைகளில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கக்கூடிய வள்ளலாக இருந்தது கடிதம் எழுதுதல் பகுதி தான்.
இன்றைக்கு எவ்வளவு சமூக ஊடகங்கள் அதிவிரைவில் தகவல்களை வழங்கினாலும், மக்களை ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள செய்தாலும் கைக்கடிதம்(பெறுநர் இருக்கும் ஊருக்கு செல்பவர் கொண்டு செல்லும் கடிதம்), காதல் கடிதம், அலுவலக கடிதம் என உங்களின் பல்வேறு அவதானங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் இந்த நவீன ஊடகங்களில் இல்லை என்பது உண்மையிலும் உண்மை.
என்றேனும் ஒருநாள் மீண்டும் வருவீர்கள். உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நான்.
அன்புடன்,
சை ஷாகுல் ஹமீது,
4/65, தெற்குத் தெரு,
இடையகோட்டை-624704,
திண்டுக்கல் மாவட்டம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)