



இந்த ஆண்டுக்கான உருஸ் விழா 23-02-2012 அன்று கொடியேற்றப்பட்டு துவங்கியது. முக்கிய நிகழ்வாக புதிய தலைமுறை நண்பர்கள் குழுவினரால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அடையாளமாக ஈதே மீலாத் கந்தூரி (முசாபிர் கானாவில்) சிறப்புற நடைபெற்றது.கொடி ஏற்றத்துக்காக
மதியம் முதல் வந்திருந்த வெளியூர்காரர்களும், உள்ளூர்காரர்களும் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் மனமார கலந்துகொண்டு வயிறார விருந்துண்டு சென்றனர்.சாதி மத பேதம் இன்றி அனைவரும் கலந்துகொண்ட நல்லிணக்க விருந்தாக அமைந்தது இந்த கந்தூரி நிகழ்வு. வரும் ஆண்டுகளிலும் இந்நிகழ்ச்சி நடைபெறவும், புதியதலை முறை நண்பர்கள் குழு மக்கள் மனதில் இடம் பெறவும் நமது அன்பான வாழ்த்துக்களும், துஆக்களும்.