ஞாயிறு, 30 டிசம்பர், 2012

இடையகோட்டையில் ஒரு அறிவுக்களஞ்சியம்




நம்ம ஊர்ல எவ்வளவோ விஷயங்கள் நமக்குத்தெரியாம இருக்குது.அப்படிப்பட்ட ஒண்ணுதான் நம்மூரு அறிவுக்களஞ்சியமான மாவட்ட கிளை நூலகம் இது எங்க  இருக்குதுன்னு கேக்கறீங்களா ? இடையகோட்டை ஹை ஸ்கூல் பஸ் ஸ்டாப்ல இருந்து டேமுக்குப் போறவழியில ஜமின்தார் அரண்மனைக்குப்பக்கத்துல மெயின் ரோட்டுலயே இருக்குது.
     
    இந்த லைப்ரரியப்பத்தி இதனோட நூலகர் திரு.A .பாஸ்கர் அவர்கள் கூறும்போது ,"இந்த நூலகம் 30-03-1964 இல் வாடகை கட்டிடத்தில் துவக்கப்பட்டு பின்னர் தற்போதுள்ள சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

இங்குள்ள நூல்கள்  மொத்தம்  சுமார்---------------------19324
உறுப்பினர்களின் எண்ணிக்கை----------------------------2783
தமிழ் நாளிதழ்கள் எண்ணிக்கை----------------------------13
ஆங்கில நாளிதழ்களின் எண்ணிக்கை--------------------3
பருவ இதழ்கள் (வார இதழ்கள்,மாத இதழ்கள்)----------81

     இங்கு கலை,அறிவியல்,தொழில்நுட்பம்,வரலாறு,சட்டம், இலக்கியம்,அரசியல்,பல்வேறு மத ஆன்மிகம்,பண்பாடு,சுயசரிதை,ஆய்வுக் கட்டுரைகள்,கணினி மற்றும் கல்வி  சார்ந்த நூல்களும் கோலன் பகுப்பு முறையில் வரிசைப்படுத்தப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன.வாரம்தோறும் வெள்ளிகிழமை மற்றும் மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளிலும் விடுமுறையாகும். மற்ற  நாட்களில் காலை ,மாலை இரு நேரங்களிலும் திறக்கப்பட்டிருக்கும்.உறுப்பினராக காப்புத்தொகை ரூபாய் 15.00(பதினைந்து மட்டும் ) ஆண்டுச்சந்தா ரூபாய் 5.00 (ஐந்து மட்டும்)வசூலிக்கப்படுகிறது என்றார்.

[இந்த கட்டணங்கள் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துசென்று படிப்பதற்கு மட்டுமே, நூலகத்திலேயே படிப்பதற்கு அனுமதி முற்றிலும் இலவசம் ]

 நம்மூர்ல இப்படிப்பட்ட ஒரு அறிவுக்களஞ்சியம் இருக்குறப்போ வேற பொழுதுபோக்கத்  தேடி நாம ஏன் அலையணும்.பேரறிஞர் அண்ணா அவர்களே குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு வீட்டுக்கொரு நூலகம் வேண்டும்னு சொல்லியிருக்காரு வீட்டுகொரு நூலகம் வைக்கமுடியலைன்னாலும் ஊர் நூலகத்தையாவது நல்லமுறையில பயன்படுத்தலாமே .   அப்புறமென்ன லைப்ரரிக்கு கெளம்பிட்டீங்களா? 

திங்கள், 10 டிசம்பர், 2012

உலகம் அழியுதா?

என்ன நண்பர்களே டிசம்பர் 21 -ல உலகம் அழியப்போகுதுன்னு பீதிய கெளப்புராங்களே இது உண்மையா ?
இதுக்கு முன்னாடிகூட 1985 -ல ஸ்கைலாப் செயற்கைக்கோள் பூமில மோதி உலகம் அழியும்னு சொன்னாங்க,
அப்புறம் 1997-ல ஷூ மேக்கர்-லெவி வியாழன் கிரகத்துல மோதும்போது ம் ,1999 டிசம்பர் 31 அன்னக்கி, 2002-ல ,8-8-2008, 10-10-2010 இப்படி பல தடவை இந்தமாதிரி டர்ர்ர கெளப்பிவிட்டுருக்காங்க.அறிவியல் அடிப்படையில பூமியோட ஆயுள் இன்னமும் 500வருடங்கள் இருக்கிறதாக விஞ்ஞானிகள் சொல்றாங்க .ஆன்மீக அடிப்படையில உலக மக்கள்தொகையில 2/3 அளவுக்கு மக்கள் கடைபிடிக்கிறது கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களைத்தான் இந்தரெண்டு தரப்புமே ஏசுநாதர் (முஸ்லிம்களுக்கு ஈசா நபி) வந்தப்புறம்தான் உலகம் அழியும்னு நம்புறாங்க.(அப்படி ஏசுநாதர் நாளைக்கே வந்தாலும் நாற்பது வருடம் அவர் ஆட்சி செஞ்சப்புறம் தான் உலகம் அழியும் அதுனால கொறஞ்சது நாப்பது வருடம் எதுவும் ஆகாது) இதுக்கு முன்னாடி 100 வருடங்களுக்கு முன்ன பூமிமீது ஒரு விண்கல் தாக்குனப்போ சுமார் 40000 (அமெரிக்க கண்டத்துல )பேர் இறந்தாங்க. அதே அளவு விண்கல் மறுபடியும் தாக்குறதுக்குகூட  தற்சமயம் வாய்ப்பில்லை. பூகம்பம் வந்தாக்கூட பூமி முழுவதும் அழியாது.எனவே மக்களே யாராச்சும் உலகம் அழியப்போகுதுன்னு சொன்ன அவங்ககிட்ட உலகமே அழியும் போது உங்க சொத்து , பணத்தையெல்லாம் எனக்கு கொடுங்கன்னு கேளுங்க. என்ன ஓகேவா? நிம்மதியா இருங்க.