செவ்வாய், 25 டிசம்பர், 2018

IDAYAKOTTAI- அக்கம் பக்கம்





     
        இன்னக்கி காவிரிப் பிரச்சினையைப்பத்தி பேசுரமே; சுமார் நூற்றைம்பது வருசத்துக்கு முன்னாடி ஒரு ஓடை யாருக்குச் சொந்தம்னு ரெண்டு ஜமீனுக்கிடையில போர் நடந்த வரலாறே இருக்குது தெரியுமா? 
            பழனிக்குப் பக்கத்துல ஆயக்குடி மற்றும் விருப்பாட்சி ஆகிய  ரெண்டு ஜமீன்களுக்கிடையே ஒரு ஓடை நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சர்ச்சை மோதலாக உருவெடுத்தது.இந்த போரில் விருப்பாட்சி சார்பில் போரிட்ட தளபதி வீரத்துடன் போரிட்டு வெற்றியை நெருங்கிய நிலையில் எதிரணி போர்வீரனின் கொரில்லா முறையில் அவரை வெட்டியதையடுத்து தலை துண்டான நிலையில் வீரமரணம் அடைந்துள்ளார். தலையற்ற அவரது உடலை சுமந்து வந்த அவரது குதிரை அன்னார் வசித்த ஊரில் சேர்த்ததை அடுத்து அங்கு அன்னாரின் நினைவிடம் அப்போதைய விருப்பாட்சி பாளையக்காரரால் அமைக்கப்பட்டுள்ளதுடன்  அவரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும்வண்ணம் அவரின் வாரிசுகளுக்கு மானியமாக  நிலம் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இந்த மானியங்களை யாரேனும் அபகரிக்க முயன்றால்  அவ்வாறு அபகரிக்க முயல்பவன் அவன் முஸ்லிமாக இருந்தால் புனித மெக்கா நகரில் தனது தாயை கெடுத்த பாவத்தையும், இந்துவாக இருந்தால் அவன் காசியில் வைத்து காராம்பசுவையும் அதன் கன்றையும் கொலை செய்த பாவத்தையும் அடைவார்கள் என்ற எச்சரிக்கையுடன் கல்வெட்டும் அமைக்கப்பட்டுள்ளது.
         இந்த நினைவிடம் ஒட்டன்சத்திரம்-பழனி நெடுஞ்சாலையில் மாட்டுப்பாதை என்னும் இடத்திலிருந்து 4கி.மீ தூரத்தில் போடுவார்பட்டி என்னும் சிற்றூரில் ஒரு வழிபாட்டுத்தலமாக உள்ளது. இங்கு அன்னாரின் போர்வாள் உள்ளிட்ட பொருட்கள்  காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
     ஆண்டுதோறும் இஸ்லாமிய ஹிஜ்ரி வருடத்தின் ஷவ்வால் மாதத்தில் அன்னாருக்கு விழா நடத்தப்படுகிறது. சையது உஸ்மான் ஷாதுப் பாபுஜி என்ற பெயர் கொண்ட அந்த மாவீரரின் தலை ஆயக்குடியில் போர் நடந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் உள்ளது. மதங்களை கடந்த நட்புக்கும் வீரத்துக்கும் அடையாளமாக திகழ்கிறது போடுவார்பட்டி கிராமம்..
படங்கள்
1.பெயர்ப்பலகை
2. அவரின் போர்வாள்
3. நினைவிடம்
4. அடக்கம் செய்யப்பட்ட இடம்
5. மானிய கல்வெட்டு 

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

IDAYAKOTTAI - மலரும் நினைவுகள்


IDAYAKOTTAI - கஜா புயல்

தாய்லாந்து நாட்டில்தான் உலகிலேயே அதிகமாக வெள்ளை நிற யானைகள் உள்ளன . நாம்  பார்க்கும் கருப்பு நிற யானைகள் அங்கு அபூர்வம் . தாய்லாந்து மொழியில் கருப்பு யானையை குறிக்கும் சொல்தான் கஜா. 

அதனால்தானோ என்னவோ மதம் கொண்ட யானை போல் 16.11.2018 வெள்ளிக்கிழமை இடையகோட்டையை புரட்டிப் போட்டது கஜா புயல் வேம்பு, கருவேலம், வாழை போன்ற நூற்றுக்கணக்கான மரங்கள் , மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள், மின்கம்பங்கள் வீட்டுக்கூரைகள் என ஒரு காட்டு காட்டிவிட்டுப் போன புயலின் பாதிப்புகள் சற்றே அதிகம்தான்.

      1977 & 1993 வெள்ள பாதிப்புகள் 2005 நங்காஞ்சி அணை உடைந்தது போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொண்ட நமதூர் மக்களுக்கு இது புது அனுபவம் போல் தோன்றினாலும் உண்மையிலேயே நமது ஊருக்கு இது புதிதல்ல என்பதே உண்மை.
       
  1. இளவேனில் - சித்திரை, வைகாசி
  2. முதுவேனில் - ஆனி, ஆடி
  3. கார் - ஆவணி, புரட்டாசி
  4. கூதிர் - ஐப்பசி, கார்த்திகை
  5. முன்பனி - மார்கழி, தை
  6. பின்பனி - மாசி, பங்குனி
சற்றே பின்னோக்கி செல்வோம் நமது தமிழ் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பருவ கால வகைகளில் (பெரும்பொழுதுகள் )  வரும் கார் காலம் என்பது  சுழன்றடிக்கும் காற்றுடன் மழை பெய்யும்காலம் ஆகும்.
      என்றாலும் இலக்கியத்துக்கும் நடைமுறைக்கும் இடையே மாறுபாடு இருக்கத்தான் செய்கிறது எனவேதான் நடைமுறை அனுபவங்களை வைத்து புரட்டாசியில் மழை புரண்டு உருண்டு பெய்யும்(இடி மின்னல் அதிகம் ), ஐப்பசியில் அடைமழை (பலநாட்களுக்கு விடாது பெய்யும் ), கார்த்திகையில் கார்மழை (கடும் காற்றுடன் மழை ) என பழமொழி கூறியுள்ளனர் .
   இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் புயல் குறித்து கணிப்புகளும் அதிக வதந்திகளும் நமதூர் போன்ற உள்மாவட்டப் பகுதிவரை தெரிந்துள்ளது .
உண்மையில் இந்த புயல் முன்பு சொன்ன கார்மழைதான்.1982ஆம் ஆண்டில் பெய்த கார்மழை காரணமாக பல குடிசைகளும் சில ஓட்டு வீடுகளும் சேதமடைந்தது மூத்தோர் பலருக்கும் நினைவிருக்கலாம்.
ஆனால் அப்போதெல்லாம் மழைக்காலத்துக்கு முன்பே முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு விவசாய இழப்புகளை தவிர்த்து வந்துள்ளனர்.அப்போது  புயல் என்பது கடலோரப்பகுதிகளில் ஏற்படும் ஒரு நிகழ்வாகவே அறியப்பட்டது .
இன்றைய வாழ்க்கைமுறை நவீனம் என்ற பெயரில் நமது சிந்தனைகளை பூட்டு போட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கஜா புயலை காரணம் கட்டுவது சரியல்ல. இனியாவது விழிப்புணர்வுடன் இருப்போம் .மரங்களை சரியாக கவாத்து செய்தும் முள்கம்பி வேலிக்கு பதிலாக இயற்கையான முறையில் வேலி அமைத்தும், இவ்வாறு அமைக்கப்படும் வேலிக்கருவை மரங்கள் மூலம் காற்றின் வேகம் மட்டுப்படும்.(சீமைக்கருவை அல்ல) ஓடைகள், கால்வாய் போன்ற நீர்வடிகால்களை நமது பகுதிகளில் நாமே தூர்வாரியும் வெள்ளப்பாதிப்பை தவிர்க்கலாம்
ஏற்கனவே பல்வேறு வழிகளில்இயற்கையை அழித்து பருவகால மாறுபாட்டை உருவாக்கிவிட்டது நம் மனித இனம் இனியாவது விழிப்புடன் இருப்போம் .இயற்கையோடியியைந்த வாழ்க்கை வாழ்வோம் .

திங்கள், 5 நவம்பர், 2018

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

-புகழரசன்

வியாழன், 29 மார்ச், 2018

IDAYAKOTTAI - வருந்துகிறோம்

இடையகோட்டையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய ஆரம்ப கால இயக்க முன்னோடியும், எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த பேரன்பால் அ.இ.அ.தி.மு.க உருவானபோது அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் அக்கட்சியின் விசுவாசியாகத் திகழ்ந்த  திரு.அப்துல் வகாப் அவர்கள்  இன்று காலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.அன்னாரது உடல் நல்லடக்கம் இன்று பிற்பகல் இடையகோட்டை ,ஜும்ஆ பள்ளியில் இன்று பிற்பகல் நடைபெற்றது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

        அன்னார் முன்னர் தி.மு.க.வில் இருந்தபோது கிளைப் பொருளாளராக பணியாற்றியுள்ளார். பேரறிஞர்.அண்ணா, டாக்டர்.கலைஞர் ஆகியோர் நமது ஊருக்கு வந்தபோது பொதுக்கூட்டங்களை நடத்த உறுதுணையாக இருந்ததுடன், இவர் பேருந்து நிலையத்தில் நடத்திவந்த சைக்கிள் கடையே கட்சியின் அலுவலகமாகத் திகழ்ந்துள்ளது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தி.மு.க.வில் இருந்து விலகியபோது அவருடன் சென்ற பல்லாயிரம் தொண்டர்களில் அன்னாரும் ஒருவர் அவரின் ஆன்ம நலனுக்காக பிரார்த்திக்க வேண்டுகிறோம்.   

வியாழன், 11 ஜனவரி, 2018

IDAYAKOTTAI WONDERFUL IMAGES

இடையகோட்டையில் இன்று(11.01.2018)  காலை 6.00 மணி முதல் 8.45 வரை  நிலவிய எழில்மிகு பனிமூட்டம்